×

தேர்தல் பாதுகாப்பு பணி என்எஸ்எஸ் அணியினருடன் தூத்துக்குடியில் கலந்தாய்வு எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்பு

தூத்துக்குடி, மார்ச் 26: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை இணைந்து மேற்கொள்வது தொடர்பாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணியினர், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம்  தூத்துக்குடியில் நடந்தது. எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்றார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறையினர் பங்கேற்க வருமாறு  எஸ்பி ஜெயக்குமார் அழைப்பு விடுத்திருந்தார். அதே போன்று தற்போது நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சேவையும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுவதால், சம்பந்தப்பட்ட கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து, எத்தனை மாணவர்கள் கலந்து கொள்ள விருப்பத்துடன் உள்ளார்கள், இப்பணியில் கலந்து கொள்வதற்கு என்னென்ன வசதிகள் செய்து தரவேண்டும் என்பன பற்றி பல்வேறு கருத்துக்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.ஆலோசனை கூட்டத்தில் 21 கல்லூரிகளைச்  சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் ஏடிஎஸ்பிகள் இளங்கோவன், முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் பேச்சிமுத்து, ஏழுமலை, பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர்  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : SP Jayakumar ,Thoothukudi ,NSS ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...