×

கோவில்பட்டி தொகுதியில் தீவிர பிரசாரம் பல்வேறு நலத்திட்டங்களை தினகரன் செயல்படுத்துவார் மாணிக்கராஜா பேச்சு

கோவில்பட்டி, மார்ச் 26: கோவில்பட்டி தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமமுக வேட்பாளர்  டிடிவி தினகரன் செயல்படுத்துவார் என தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தென் மண்டல அமைப்பு  செயலாளர் மாணிக்கராஜா கூறினார்.கோவில்பட்டி தொகுதி அமமுக வேட்பாளராகப் போட்டியிடும்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து தென்மண்டல அமைப்பு செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான  மாணிக்கராஜா, கோவில்பட்டியில் வீதிவீதியாக நேற்று வாக்கு சேகரித்தார். காந்திநகர், திலகர் நகர், ராமசாமி  தெரு, முத்துராமலிங்கம் தெரு, கஸ்தூரிபாய் நகர், அத்தைகொண்டான் ரோடு,  நடராஜபுரம் தெரு 1 முதல் 9 தெரு வரை, மகாராஜா கோவில் தெரு, பசும்பொன் நகர்,  பெரியார் தெரு, ஜமீன்பேட்டை தெரு, சரமாரியம்மன் கோயில் தெரு, தேவர் கல்யாண  மண்டபம், பண்ணைத் தோட்ட தெரு, டால்துரை பங்களாத்தெரு, எம்.ஆர்.கோபாலன்  தெரு, ராஜா லைன், தெட்சிணாமூர்த்தி கோவில் தெரு, சீனிவாச அக்ரஹாரம்,  லட்சுமி மில் கீழக்காலனி உள்ளிட்ட பகுதிகளில் துண்டுபிரசுரம் வழங்கி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.கோவில்பட்டி  காந்திநகரில் அவர் பேசுகையில், ‘‘டிடிவி தினகரன் வெற்றிபெற்றதும் கோவில்பட்டி  தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார். தொகுதி மக்களின் குறைகளை  தீர்க்க கோவில்பட்டியில் அலுவலகம் அமைக்கப்படும். கூப்பிட்ட குரலுக்கு  ஓடோடி வரக்கூடியவர் தினகரன். அவருடன் சேர்ந்து நானும் பணியாற்றுவேன். 100 நாள் வேலை திட்டம் 150 நாள்  வேலையாக அறிவிக்கப்படும்.

 மக்கள் பணி செய்வதில் மகத்தான தினகரன் அதிக வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றிபெற நீங்கள் அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க  வேண்டும்’’ என்றார். பிரசாரத்தில் அமமுக கோவில்பட்டி நகரச் செயலாளர் கார்த்திக், ஒன்றியச்  செயலாளர் ஜெய்சங்கர், வக்கீல் அணி மாவட்டச் செயலாளர் சங்கர்கணேஷ், மாணவர் அணி மாநில தலைவர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் அமிர்தராஜ் பாண்டியன்,  தேமுதிக மாவட்டச் செயலாளர் அழகர்சாமி, அமமுக வார்டு செயலாளர் வெள்ளத்துரை,  முன்னாள் நகர செயலாளர் நாகராஜ், பூலோகபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Kovilpatti ,Manikkaraja ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி அருகே தீப்பெட்டி கிடங்கில் தீ விபத்து..!!