×

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மகளிர் விழிப்புணர்வு முகாம்

நாசரேத், மார்ச் 26: நாசரேத் மர்காஷிஸ்  கல்லூரியில் மகளிருக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. நாட்டுநலப்பணிதிட்டம் சார்பில் நடந்த இம்முகாமிற்கு கல்லூரி துணை முதல்வர் பெரியநாயகம் ஜெயராஜ் தலைமை வகித்தார். பொருளியியல் துறை தலைவர் சலோமி கிறிஸ்டிலைட் வேதப்பாடம் வாசித்தார். வேதியியல் துறைதலைவர் ஜேனட் சில்வியா வரவேற்றார். முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரித் தாளாளர் ராஜ் கமல் பெட்ரோ வாழ்த்திப் பேசினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்  நடந்தன. கல்லூரி நிதியாளார் குளோரியம் அருள்ராஜ், ஆங்கிலத்துறைப் பேராசிரியை பியூலாஹேமலதா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். பேராசிரியை ஸ்வீட்லி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரிச் செயலாளர் எஸ்.டி.கே. ராஜன், முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Women's Awareness Camp ,Nazareth ,Margashis College ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்