×

மலையடிகுறிச்சியில் அதிமுக வேட்பாளர் மனோகரன் பிரசாரம்

புளியங்குடி, மார்ச் 26:  வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் மனோகரன் போட்டியிடுகிறார். நேற்று அவர் வெள்ளனைகோட்டை, தாருகாபுரம், மலையடிகுறிச்சி கிராமங்களில் வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டார். அங்குள்ள சமுதாய பெரியோர்கள், ஊர் மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்aபோது அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் 5ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அதிமுக அரசின் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவரும் பயன் பெற்றனர். இந்த சாதனைகள் தொடர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  யுஎஸ்ஏ வெங்கடேசன், வாசு ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி பாண்டியன்,துரை பாண்டியன், முன்னாள் மாணவரணி தலைவர் சசிகுமார், பாஜ மாவட்ட தலைவர் ராமராஜா, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் மூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர் ராஜாராம் பாண்டியன், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் சாமுவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன், கருத்தப்பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி தாய், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சோமசுந்தரம், வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளர் பாண்டிதுரை, பாஜ ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, செயலாளர் கிருஷ்ணன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,Manokaran ,Malayadikurichi ,
× RELATED மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை