×

மானூர் பகுதியில் அரசு கல்லூரி நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணன் உறுதி

நெல்லை, மார்ச் 26:  நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் ெலட்சுமணன், நேற்று காலையில் மானூர் வடக்கு ஒன்றியத்தில் தாழையூத்து, தென்கலம், நாஞ்சான்குளம், மதவக்குறிச்சி, வெங்கல ெபாட்டல் உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக பிரசாரம் செய்தார். அவருக்கு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.ஏஎல்எஸ் ெலட்சுமணன் பேசுகையில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மானூர் பெரியகுளம், பள்ளமடை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரச் செய்வேன். மானூர் பகுதி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்விக்கு நெல்லை, பாளைக்கு சென்று வருகின்றனர். மாணவர்களின் சிரமத்தை போக்க மானூரில் அரசு கல்லூரி அமைக்க பாடுபடுவேன். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
பிரசாரத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் தாழை கே.ஆர்.ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அருள்மணி, ஐடி அணி நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி, தொமுச இன்பராஜ், ராமசாமி, காளிபாண்டி, வர்த்தக அணி எல்ஐசி பேச்சிமுத்து, நயினார்முகம்மது, பேச்சாளர்கள் நெல்லை முத்தையா, பாம்புகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்ேகற்றனர்.

Tags : DMK ,Lakshmanan ,Nellai ,Manor ,
× RELATED இறந்த தாய்க்கு இறுதிச் சடங்கு...