×

சங்கரன்கோவில் தொகுதியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படு

திருவேங்கடம், மார்ச் 26: சங்கரன்கோவில் தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளர் ராஜா வாக்குறுதி அளித்தார்.சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் ராஜா குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் ஆராய்ச்சிபட்டி, திருமலாபுரம், கொக்குகுளம், வலசை, சிதம்பராபுரம், கே.கோவில்பட்டி, சின்னகரடிகுளம், அய்யாபுரம், சம்பகுளம், மருதன்கிணறு, வண்ணியம்பட்டி, மீனாட்சிபுரம், களப்பாங்குளம், கரிசல்குளம், மேலநாலாந்துலா, நாயக்கர்பட்டி, ஓடைக்கரைப்பட்டி, பழங்கோட்டை, கரட்டுமலை, கம்மாப்பட்டி, வேப்பன்குளம், அவனிக்கோனேந்தல், தோணுகால், புன்னையாபுரம், செட்டிகுளம், மகேந்திரவாடி, இராயப்பபுரம், வெங்கடாசலபுரம், ரெங்கசமுத்திரம் ஆகிய கிராமங்களில் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில்  திமுக வேட்பாளர் ராஜா பேசியதாவது.   நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதி மக்களின்   குடிநீர், சாலை, தெருவிளக்கு, வாறுகால், பஸ் வசதி போன்ற அடிப்படை தேவைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தில்  திமுக  ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, வெற்றிவிஜன், முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன், மாவட்ட இலக்கியஅணி எம்எஸ்எல் பிரேம்குமார், வழக்கறிஞர் பெரியதுரை, மாவட்ட தொண்டரணி கிருஷ்ணசாமி, கொடி கோபாலகிருஷ்ணன், செல்லப்பாண்டி, உமாசங்கர், தினகரன், கண்ணன், பூலித்தேவன், செந்தில்குமார், மக்கள் கழகத்தை சேர்ந்த பெருமாள்சாமி, கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Sankarankoil ,
× RELATED சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில்...