×

கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் மனோஜ்பாண்டியன் தீவிர பிரசாரம்

பாவூர்சத்திரம், மார்ச் 26: ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மனோஜ்பாண்டியன் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில்  வாக்கு சேகரித்தார். பேரூராட்சிகுட்பட்ட அனைத்து வார்டு பகுதிகள், கருமடையூர், மூலக்கரையூர்,  சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில்  அவர் பேசுகையில், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிக்கு தினமும் தாமிரபரணி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன்,  கீழப்பாவூரில் திருமண மண்டபம் கட்டித்தரப்படும். மேலும் பீடித் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரசாரத்தில்  முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன், பேரூர் செயலர் ஜெயராமன், தொகுதி பொறுப்பாளர் ராதா, நிர்வாகிகள் கணபதி, மதியழகன், பாஸ்கர், சாமிநாதன், கப்பல், ராமச்சந்திரன், பாஜ அருள்செல்வம், அதிமுக வார்டு செயலர்கள் ராமசந்திரன், வையாபுரி, காளிமுத்து, சுதர்சன், சிவசுப்பிரமணியன், வேலுசாமி, முத்துசாமி, பரமசிவ பாண்டியன், சரவணன், கருப்பம்மாள், செல்வராஜ், அன்பரசு, கணேசன், செல்லச்சாமி, சுந்தராஜ், மாரியப்பன், சமுத்திரம், சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Manojpandian ,Keelappavoor ,
× RELATED கிடாரக்குளத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு