×

வியாபாரிகளுக்கு பல்வேறு திட்டங்கள்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று காலை தொகுதிக்கு உட்பட்ட எஸ்.என்.செட்டி தெரு பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து புது காமராஜர் நகர், புதுமனை, தாண்டவராயன் தெரு, முத்தமிழ் நகர், ஜி.ஏ.ரோடு, சாந்தி காலனி, கிரேஸ் கார்டன், சிங்கார தோட்டம், சோமு செட்டி தெரு, ஆதாம் தெரு, பாஷ்யம் தெரு, வேலாயுதம்மாள் தெரு, எம்.சி.ரோடு, சுழல் மெத்தை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘ராயபுரம் தொகுதி வியாபாரம் நிறைந்த பகுதி. வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்விதமாக பல்வேறு திட்டங்களை கொண்டு வரப்படும். பொதுமக்கள், இளைஞர்கள், முதியோர் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன். சாலை, குடிநீர், மின்சாரம் தடையின்றி கிடைக்க வழிவகை செய்வேன். ராயபுரம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற சிறப்பு திட்டம் ஏற்படுத்த உள்ளேன்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக அது இருக்கும். அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் எனது தொகுதிக்கு விரைந்து செயல்படுத்துவேன். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் வெற்றிபெற செய்ய வேண்ம்,’ என்றார்.

Tags : Minister ,Jayakumar ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...