×

சிவகாசி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

சிவகாசி, மார்ச் 26: சிவகாசி அருகே திருத்தங்கல் பணையடிப்பட்டியில் வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடினர். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் கோயில் பொருளாளர் குருவையா புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!