×

பெரியகுளம் அருகே கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

பெரியகுளம், மார்ச் 26: ஆர்விஎஸ் பத்மாவதி தோட்டக்கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.தோட்டக்கலைக்கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் தொடர்ந்து 60 நாட்கள் ஏதேனும் கிராமத்தில் தங்கி அங்குள்ள விவசாயிகளுக்கு தற்போது விவசாயத்தில் உள்ள விஞ்ஞான முன்னேற்றம் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தும் விவசாயிகளிடம் உள்ள அனுபவங்கள் குறித்து தெரிந்தும் வருகின்றனர். அதனடிப்படையில் பெரியகுளத்தில் தங்கியுள்ள மாணவிகள் திவ்யபாரதி, சாலினி, மணிஷா, சங்கரேஸ்வரி, நிவேதா, சுபலட்சுமி ஆகியோர் கைலாசபட்டியில் உள்ள சீனிவாசனுக்குச் சொந்தமான தோட்டத்தில் கிராமபுற தோட்டக்கலைப்பணி அனுபவ திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மையின் பூச்சி விரட்டல், மற்றும் பஞ்சகாவ்யம் , தசகாவ்யம் , ஜந்திலை கரைசல்கள் பற்றியும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

Tags : Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி