×

வைகையுடன் கிருதுமால் நதியை இணைக்க பாடுபடுவேன் திமுக வேட்பாளர் முருகேசன் பிரசாரம்

பரமக்குடி, மார்ச் 26:  பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் முருகேசன், பரமக்குடி நகர், புறநகர் பகுதிகளான பரமக்குடி ஒன்றியம், போகலூர் ஒன்றியம், நயினார்கோவில் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, கமுதி வடக்கு ஒன்றியப் பகுதிகளான மண்டல மாணிக்கம், டி.புனவாசல், தரக்குடி உள்ளிட்ட 10 கிராமங்களில்  தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் பேசும்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கமுதி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வாறுகால், சாலை, தெரு விளக்குகள் அமைக்க முன்னுரிமை அளிப்பேன். காவிரி கூட்டு குடிநீர் ஒவ்வொரு கிராமங்களுக்கும் கொண்டு வருவேன். கமுதி ஒன்றியத்திற்கு வைகை-பரளை ஆறு- கிருதுமால் நதி இணைக்க பாடுபடுவேன். விவசாய பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு கால்வாய் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திசைவீரன் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், கமுதி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அய்யனார், முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர் சுப.த.சம்பத், பரமக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார், ஊராட்சி மன்ற தலைவர் காவடி முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜேந்திரன், முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Tags : DMK ,Murugesan ,Kritumal river ,Vaigai ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி