×

மாயனூர் அணைக்கட்டு வழியாக காவிரி நீர் குளங்களில் நிரப்பப்படும் வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜன் உறுதி

குஜிலியம்பாறை, மார்ச் 26: வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜன், நேற்று குஜிலியம்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கூம்பூர், மல்லப்புரம் உள்ளிட்ட 78 கிராமங்களில் வாக்கு சேரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஆட்சியமைத்த 6 மாதத்தில் மூன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் சுமார் 7 லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிமுக அரசு தட்டி பறித்துள்ளது. எனவே தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத அதிமுக அரசை விரட்டியடியுங்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்தால், எனது கனவு திட்டமான காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாயனூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீரை வாய்க்கால் மூலமாக கொண்டு வந்து வேடசந்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் நிரப்பி, விவசாயம் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

பிரச்சாரத்தில் குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்பிரமணி, சவுந்தர்மாரியப்பன், இளங்கோ, கிருஷ்ணன், மணிமாறன், தாமரைக்கண்ணன், ராஜ்குமார், செல்வராஜ், செல்வநாராயணன், கலைச்செல்வன், சுரேஷ், தங்கராஜ், தனுஷ்கண்ணன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Kandirajan ,Vedasandur ,Cauvery ,Mayanur dam ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி