×

மக்களின் கணிப்பு தேர்தல் அன்று வெளிப்படும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

கருங்கல், மார்ச் 25: மக்களின் கணிப்பு தேர்தல் அன்று வெளிப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜூட் தேவ் ஆகியோரை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக கருங்கல் வந்த ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: கருத்து கணிப்பு மக்களை ஏமாற்றும் கணிப்பு, மக்கள் கணிப்பு மக்கள் மனதில் இருந்து வெளி வரக்கூடிய உண்மையான கணிப்பு, மக்களின் கணிப்பு தேர்தல் அன்று வெளிப்படும் ஒன்று. மத்திய மாநில அரசின் திட்டங்கள் தமிழகத்தில் முழுமையாக வந்து சேர்ந்து தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக வரக்கூடிய நல்ல சூழல் உள்ளபோது நிச்சயமாக ஒத்த கருத்துடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tamaga ,GK Vasan ,
× RELATED தொகுதி பங்கீடு தொடர்பாக ஜி.கே.வாசனுடன் ஒன்றிய அமைச்சர் சந்திப்பு