×

எனக்காக ஒரே நாள் நீங்கள் வாக்களித்தால் 5 ஆண்டுகள் உங்களுக்காக உழைப்பேன்: திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா வாக்குறுதி

திருவள்ளூர்,மார்ச் 25: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா கடம்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் அதிமுக ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர் தலைமையில் நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். பொது மக்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவர் பேசும்போது, நான் கடந்த 2011 முதல் 16 வரை அமைச்சராக இருந்தபோது திருவள்ளூர் தொகுதிக்கு எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி சாதனை படைத்துள்ளேன். மீண்டும் நான் தற்போது போட்டியிடுகிறேன். வாக்குப்பதிவு அன்று ஒரு நாள் எனக்காக நீங்கள் வாக்களித்தால், 5 ஆண்டுகள் உங்களுக்காக உழைப்பேன். என்னுடைய தொலைபேசி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு உங்களது கோரிக்கையை தெரிவித்தால் நிச்சயம் உடணுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்றத்தேர்தலில் அதிமுக அறிவித்துள்ள குடும்பத் தலைவிக்கு ரூ. 1500 ஊதியம், வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசம், விலையில்லா வாஷிங் மெஷின் போன்ற அனைத்தையும் வழங்குவோம் என பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், பாஜக மாவட்டத்தலைவர் ஏ.ராஜ்குமார், பாமக நிர்வாகிகள் நா.வெங்கடேசன், இ.திணேஷ்குமார், விஜயராகவன், புரட்சி பாரதம் மாநில இளைஞரணி தலைவர் மணவூர் ஜி.மகா, மப்பேடு சரவணன், வக்கீல் தொடுகாடு, அதிமுக நிர்வாகிகள் காசி, இ.இன்பநாதன், சிற்றம் ஜெ.சீனிவாசன், பி.பாசூரன், பொ.பூபாலன், செஞ்சி பாலு, கே.என்.முரளி, என்.சீனிவாசன், இரு.வே.தட்சிணாமூர்த்தி, எஸ்.ஞானகுமார், கா.ரஜினி ஆதிபாஸ்கர், மேலாசுதாகர், எஸ்.வேல்முருகன், சக்தி ரங்கன், பெருமாள்பட்டு எம்.வெங்கடேசன், முனி பாபு திருமழிசை எல்.சங்கர், மேகநாதன், நெய்வேலி ஜெகநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : Tiruvallur ,AIADMK ,PV Ramana ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...