×

மக்களின் கோரிக்கை நிறைவேற்றுவேன்: த.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மயிலை த.வேலு போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் நேற்று காலை 7 மணி முதல் 173வது வட்டத்தில் உள்ள கே.வி.பி கார்டன், முத்தையாபுரம், குட்டி கிராமணி தெரு, சண்முகாபுரம், கோவிந்தசாமி நகர், மாதவன் நகர், மே பிளவர் கார்டன், ெவள்ளீஸ்வரன் தோட்டம், நாராயண செட்டி தெரு, நாராயணசாமி தோட்டம், ஆர்.கே.நகர், பிஷப்கார்டன் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களான மகளிருக்கு மாதம் 1000, கொரோனா பாதிப்பு காரணமாக ரேஷன் கார்டுக்கு 4000, சிலிண்டருக்கு 100 மானியம், சொந்தமாக ஆட்டோ வாங்க 10 ஆயிரம் அரசு மானியம் ஆகியவற்றை எடுத்து கூறி தொகுதி மக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது, பொதுமக்கள் அவரை உற்சாக வரவேற்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து, மக்களை வீடு வீடாக சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள பூக்கடைகள், காய்கறி மற்றும் மளிகை கடை வைத்திருப்பவர்களிடம் குறைகளை கேட்டு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்து பூக்களை தூவி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், “பொதுமக்களின் குறைகளை கேட்டு உங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பதே என்னுடைய முதல் பணி, மயிலாப்பூர் தொகுதியை ஒரு சிறந்த தொகுதியாக மாற்றி காட்டுவேன். இதையடுத்து அப்பகுதி மக்களிடம் திமுகவின் சின்னமான உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்று அவர் கூறினார். அதற்கு பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன், “திமுக தான் நிச்சயம் வெற்றி பெறும். எங்களுடைய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு தான்” என உறுதி அளித்தனர்.

Tags : T.Velu ,
× RELATED ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்: மயிலை த.வேலு வாக்குறுதி