×

பழநியில் பாதாளச்சாக்கடை திட்டம்

ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ உறுதி  
பழநி, மார்ச் 25: திமுகவிற்கு போடும் ஓட்டு தமிழக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனக் கூறி பழநியில் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.பழநி தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் பழநி ஒன்றியம் சிவகிரிப்பட்டி, முல்லை நகர், தட்டான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும். எனக்கு வாக்களித்தால் பழநி நகரின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றி தரப்படும். அதுபோல் கொடைக்கானலிலும் இத்திட்டம் உடன் நிறைவேற்றப்படும்.

மேலும், பழநி பகுதியில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கோயில் நகரான பழநியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, புனித நகராக அறிவிக்க உரிய நடவடிக்கை ஏற்படுத்தி தரப்படும். விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் திட்டங்கள் ஏற்படுத்தி தரப்படும். இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பழநியில் சிப்காட் அமைக்கப்படும். கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து தரப்படும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்’’ என்றார்.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்