×

₹50 ஆயிரம் அலுமினிய பாத்திரங்கள் பறிமுதல் தண்டராம்பட்டு அருகே

தண்டராம்பட்டு, மார்ச் 25: தண்டராம்பட்டு அருகே ஆட்டோவில் கொண்டு சென்ற ₹50 ஆயிரம் மதிப்பு அலுமினிய பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். செங்கம் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தண்டராம்பட்டு அடுத்த வண்டிமேடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக அலுமினிய பாத்திரங்களை ஏற்றிக் கொண்டு வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதில், ஆட்டோவில் வந்தவர் பாத்திர வியாபாரி சிறுபாக்கம் கிராமத்தை சீனிவாசன்(50) என்பதும், அவர் கொண்டு சென்ற ₹50 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்களுக்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. எனவே, அந்த அலுமினிய பாத்திரங்களை லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு, வியாபாரி சீனிவாசனுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

Tags : Tandarampatti ,
× RELATED கடந்த 4 நாட்களாக மின் விநியோகம்...