ஊத்துக்கோட்டை, மார்ச் 24: திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்தில் செங்கரை, சூளைமேனி, லச்சிவாக்கம், பாலவாக்கம், பேரண்டூர், செஞ்சியகரம், தாராட்சி, தொம்பரம்பேடு, தாமரைக்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் திறந்த ஜீப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வழிநெடுகிலும் பெண்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து, தேங்காய், பூசணிக்காய் உடைத்தும், பட்டாசு வெடித்து, வாசலில் கோலம் போட்டும் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசியதாவது, “லச்சிவாக்கம் ஆரம்ப சுதார நிலையம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, அவைத்தலைவர் ரவிச்சந்திரன், வி.பி.ரவிக்குமார், வக்கீல்கள் தேவேந்திரன், சீனிவாசன், முனுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், பெரியபாளையம் தனசேகர், முகம்மது மொய்தீன், தண்டம் ரவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் குணசேகரன், எல்.எஸ்.சுரேஷ், தாராட்சி கார்த்திகேயன், கணபதி, சிவா, சபாபதி மற்றும் காங்கிரஸ் மூர்த்தி, கம்யூனிஸ்ட் செல்வராஜ், ஏ.ஜி.கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ராள்ளை பாபு, அறிவுச்செல்வன், அருள், பெரியபாளையம் நாகராஜ், முஸ்லீம் லிக் அன்வர்பாஷா, சையத் அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.