×

திருமழிசை பேரூராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர், மார்ச் 24: திருமழிசை பேரூராட்சி சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா கலந்துகொண்டு வண்ண பலூன்களை பறக்கிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமழிசை பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய வண்ண பலூன்களை பறக்கவிடும் நிகழ்ச்சியும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியும், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா கலந்துகொண்டு வண்ண பலூன்களை பறக்கவிட்டு, பேரணியை கொடியசைத்து, துவக்கி வைத்தார். மேலும், கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிகளில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Thirumalisai Municipality ,
× RELATED திருமழிசை பேரூராட்சியில் கொரோனா...