×

வத்திராயிருப்பு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

வத்திராயிருப்பு, மார்ச் 24: வத்திராயிருப்பு பகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்தனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்துர் (தனி) தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு ஆதரவாக, அவரது மகள் திவ்யா ராவ், வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், புதுப்பட்டி எஸ்.கொடிக்குளம் உள்ளிட்ட ஊர்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வத்திராயிருப்பில் திவ்யா ராவ் பெண்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். பெண்களும் வாக்களிப்பதாக உறுதியளித்தனர். இந்த வாக்கு சேகரிப்பில் திவ்யா ராவுடன் திமுக ஒன்றிய செயலாளர் முனியாண்டி, ஒன்றிய துணைசெயலாளர் குருபுத்திரன், பேரூர் பொறுப்பாளர் முனியாண்டி, பேரூர் துணை செயலாளர் விஜயா உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...