×

திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும் வாக்கு சேகரிப்பின்போது சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

அருப்புக்கோட்டை, மார்ச் 24: அருப்புக்கோட்டை வடக்கு, தெற்கு ஒன்றியத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி, காந்திநகர், ராஜீவ்நகர், தொட்டியாங்குளம், பொய்யாங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரப்படும். மேலும், அருப்புக்கோட்டை விரிவாக்க பகுதிகளுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி ஆகியவை செய்து தரப்படும். நூறுநாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்படும். ரேஷன் கார்டிற்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ரேசன் கடையில் தரமான அரிசி வழங்கப்படும். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியச் சேர்மன் சுப்பாராஜ், ஒன்றியச் சேர்மன் சசிகலா, மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், திமுக பிரமுகர்கள் காந்திநகர் சீனிவாசபெருமாள், தாமோ.வெங்கடேஷ், கொப்பையராஜ், செம்பட்டி சோலை, இளைஞரணி செயலாளர் அழகுராமனுஜம், ஒன்றியக் கவுன்சிலர்கள் சீனிவாசன், ராதகிருஷ்ணன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Sathur Ramachandran ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி