×

மதுரையில் பட்டப்பகலில் துணிகரம் லாட்ஜ் அதிபரின் மனைவியிடம் 32 பவுன் நகை பறிப்பு 3 பேருக்கு வலை

மதுரை, மார்ச் 24: மதுரையில் லாட்ஜ் அதிபரின் மனைவியிடம், நூதன முறையில் 32 பவுன் நகைகளை அபேஸ் செய்த 3 வழிப்பறி திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள தானப்ப முதலி தெருவை சேர்ந்தவர் முருகன். லாட்ஜ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (62). இவர். மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு டூவீலரில் வந்த ஒருவர் சற்று தூரத்தில் நின்றுகொள்ள, மற்றொரு டூவீலரில் வந்த இருவர், சரஸ்வதி அருகே வந்து, அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது, இவ்வளவு நகைகளை ஏன் அணிந்துள்ளீர்கள், இப்பகுதியில் திருடர்கள் அதிகமாக உள்ளனர் என்று கூறி, சரஸ்வதி அணிந்திருந்த நகைகளை, கழட்டி பத்திரமாக வைத்து கொள்ளும்படி கூறியுள்ளனர். இதை நம்பிய சரஸ்வதி தனது கழுத்தில் கிடந்த, 32 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலிகளை கழட்டியுள்ளார். அப்போது, அந்த 2 மர்மநபர்களும் நகைகளை ஒரு பொட்டலமாக மடித்து அவரிடம் ெகாடுத்து விட்டு ெசன்றுவிட்டனர். சிறிதுநேரத்திற்கு பின், அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, நகைக்கு பதிலாக கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின்தான் வந்தவர்கள் உதவி செய்வது போல் நடித்து, தனது நகைகளை அபேஸ் செய்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...