×

முன்னாள் ராணுவத்தினர் தேர்தல் பணிக்கு வர எஸ்.பி. அழைப்பு

நாகர்கோவில், மார்ச் 24 : குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பல ஆண்டு காலம் நம் நாட்டுக்காக சேவை செய்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் நம் நாட்டுக்காக சேவை செய்யும் ஒரு வாய்ப்பாக, தமிழகத்தில் வரும் 6.4.2021 அன்று சட்டமன்ற தேர்தலில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. குமரி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து தேர்தல் பணியாற்றிட அனைவரும் முன் வர வேண்டும். இதுவரை நடந்த தேர்தல்களில் தங்களின் ஒத்துழைப்பால் சிறப்பாகவும், அமைதியான முறையிலும் தேர்தல் நடைபெற்று இருக்கிறது.

இதே போல் இந்த ஆண்டும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற தங்களின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தேர்தல் பணிக்காக வரும் முன்னாள் ராணுவத்தினரின் நலனை கருத்தில் கொண்டு, இருப்பிடத்தின் அருகிலேயே தேர்தல் பணி அமைத்து தரப்படும். தகுந்த ஊதியமும் வழங்கப்படும். தபால் வாக்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். எனவே விருப்பமுள்ள முன்னாள் ராணுவத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04652 229 000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : S.P. ,
× RELATED சங்கரன்கோவிலில் போலீஸ் தாக்கியதில்...