×

இஸ்லாமியருக்கான நலத்திட்டம் தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்

திருப்பூர், மார்ச் 24: பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் மங்கலம் பெரிய பள்ளி வாசல் நிர்வாகிகளையும், அப்பகுதி இஸ்லாமிய மக்களையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2011ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. ஜெயலிலிதா ஆட்சியில் இருந்தபோது ஏழை, எளிய மக்களுக்காக பலவேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். அந்த திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் முழுமையாக நிறைவேற்றியுள்ள அரசு அதிமுக அரசு தான். உங்கள் பகுதிகளுக்கு தேவையான திட்டங்களையும், நீங்கள் வைத்த கோரிக்கைகளையும், அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த பரமசிவம், கரைப்புத்தூர் நடராஜன் ஆகியோர் முழுமையாக நிறைவேற்றி தந்துள்ளனர். இஸ்லாமிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செய்து தந்துள்ளது. சிறுபான்மை மக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் இருக்கும் அரசு எடப்பாடியார் அரசு தான்.  ஹஜ் மானிய உயர்வு, ரம்ஜான் நோன்புக்கு பள்ளி வாசல்களுக்கு அரிசி என திட்டங்களை தந்து இருக்கிறோம். உலமாக்களுக்கு ஓய்வூதியம், பள்ளிவாசல் புனரமைப்புக்கு நிதி என எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. என்னிடம் 10 ஆண்டுகளாக உதவியாளராக சாஜகான் என்கிற ஒரு இஸ்லாமியர்தான் இருக்கிறார். எனவே வருங்காலத்திலும் சிறுபான்மை மக்கள் நலனுக்காக திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில்,  முன்னாள் ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாச்சலம், மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், மங்கலம் முருகசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், பெரிய பள்ளி வாசல் தலைவர் காஜாமொய்தீன், செயலாளர் சாதிக், ஆடிட்டர் ஜூபைர் அலிர், சின்ன பள்ளி தலைவர் அஸ்கர் அலி, லியாகத் அலி, அபிபுல்லா, சவுந்தரராஜன், முத்துக்குமார், இடுவாய் பழனியப்பன், ஷாஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Double Leaf ,Islamists ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...