×

பந்தலூரில் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம்

பந்தலூர், மார்ச் 24:  பந்தலூர் பஜாரில் சமூக நீதி கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில், சமூக நீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் பேசுகையில்,`வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும். அதற்காக, கூடலூர் தொகுதியில் போட்டியிடும் காசிலிங்கத்தை வெற்றி பெற செய்ய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு பழங்குடியின மக்களுக்காக இப்பகுதியில் எதுவும் செய்யவில்லை, இப்பகுதிக்கு வந்த வனத்துறை அமைச்சர், பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்றிவிட சொன்னார். பழங்குடியினர் வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதியை, அரசு மாற்று திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளது.பழங்குடியினர் நிலங்களை தொண்டு நிறுவனங்கள் அபகரித்துள்ளன. இது சம்மந்தமாக, அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 1976ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கலைஞர், பழங்குடியினருக்கு கட்டிக்கொடுத்த வீட்டில்தான் இன்னும் வசித்து வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் கலெக்சன், கமிஷன், கரெப்ஷன் அதிகரித்துள்ளது. ஆகவே, வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிரசாரம் செய்ய வேண்டும்’ என்றார்.இக்கூட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகள், பழங்குடியினர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Pandharpur ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு