×

கொரோனா காலத்தில் தொகுதி முழுதும் அத்தியாவசிய பொருள் வழங்கியவர் பையா (எ) ஆர். கிருஷ்ணன்

கோவை, மார்ச் 24: தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக பபையா (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். வேட்பாளரை ஆதரித்து  திருச்சி சிவா எம்.பி. கவுண்டம்பாளையம் பகுதியில் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பிரசாரத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது: தற்போதைய நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் நம்மை வஞ்சித்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பஸ் கட்டணம் மற்றும் பால்விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் போன்ற செயல்களால் மக்களை வஞ்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் உங்களுக்கு கிடைத்திருக்கும் வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் என்றும் மக்களோடு மக்களாக - உங்களில் ஒருவராக இருப்பவர். எந்நாளும் உங்களுக்காக உழைத்து சிறப்பாக பணியாற்றக் கூடியவர். கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தொகுதி முழுவதும் வழங்கியவர். இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை ஆதரிப்பதோடு, மக்களுக்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்த நமது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அவரை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் கவுண்டம்பாளையம் பகுதியின் 9 வது மற்றும் 5 வது வார்டுகளுக்கு உட்பட்ட பிரபு நகர், அண்ணா நகர், பியூன்ஸ் காலனி, சேரன் நகர், பாலன் நகர், எஸ்.பி.நகர் ஆகிய பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பல இடங்களில் பட்டா பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, சாலை மற்றும் சாக்கடை வசதிகள் வேண்டுமென அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்தனர். இவைகள் அனைத்தையும் திமுக  ஆட்சி அமைந்த உடன் உடனடியாக செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இப்பிரசாரத்தின் போது கவுண்டம்பாளையம் பகுதியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜவஹர் மற்றும் சரத் விக்னேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் 5 வது வார்டு அசோக் நகர் கீழ் பகுதியை சேர்ந்த முகம்மது ரஹீம், அமிதாப் கண்ணன் ஆகியோருடன் அப்பகுதி ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் திமுக வேட்பாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் சி.பி.எம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட பொது செயலாளர் பரமசிவம், கொமதேகவின் மாவட்ட செயலாளர் பிரேம், மாவட்ட தலைவர் சுபாஷ், மதிமுகவின் தொகுதி பொறுப்பாளர் தங்கவேலு மற்றும் திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கே.எம்.சுந்தரம், ஆர்.சி.தியாகராஜன், ஜவஹர், பகுதி பொறுப்பாளர் கா.மதியழகன், பொறுப்பாளர் நாகராஜ், வட்ட கழக செயலாளர்கள் தன்ராஜ், நாகா முரளி பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி சசி பாபு மற்றும் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் டாக்டர் கணேஷ், சண்முகம், மைகேல், மாலதி மற்றும் மதிமுக சம்பத், சிபிஎம் துரைசாமி, பெருமாள், கொமதேக பிரகாஷ், ஆனந்த், கொங்கு சீனி, ராதாகிருஷ்ணன், சிபிஐ கார்த்திக், ஜீவா, காங்கிரஸ் மகேஷ், வடிவேல், சாந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pia (A) R. ,Krishnan ,
× RELATED புதுக்கோட்ைட அருகே மூதாட்டி கொலை...