×

அந்தியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் தீவிர வாக்கு சேகரிப்பு

அந்தியூர், மார்ச் 24:   அந்தியூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.ஜி. வெங்கடாசலம் நேற்று கூகலூர், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.   அந்தியூர் திமுக ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் கூலூர் பேரூராட்சி, தண்ணிப்பந்தல்புதூர், கொளத்தகடை, சக்கரைபாளையம், புதுக்கரைப்புதூர், ஆண்டிபாளையம், பெருந்தலையூர் ஊராட்சி, கரையாம்பாளையம், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது, ‘‘பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பிட, சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ரேஷன் கடைகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அமைத்து தரப்படும். மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், பரிசல்கள் மற்றும் மீன் பிடி இறங்குதளம், மின்விளக்கு வசதியுடன் செய்து தரப்படும். சாதி, சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆட்சிக்கு வந்ததும், திமுக தலைவர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க உள்ளார். இதில், குறிப்பாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம், கொரோனா நிவாரண உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம், வீட்டுமனைகள் வழங்கி வீடுகள் கட்டித் தரப்படும்’’ என்று தெரிவித்தார். இந்த பிரசாரத்தின்போது, உடன் ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் ரவீந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, பேரூர் கழக செயலாளர்கள் ராஜாராம், குமாரசாமி, சவுண்டப்பூர் ஊராட்சி தலைவர் சுரேஷ்குமார், தலைமை கழக பேச்சாளர் சுப்பு மற்றும் தோழமை கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : Anthiyur ,DMK ,AG Venkatachalam ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...