×

ஊத்தங்கரையில் கண்காணிப்பு தீவிரம் மாஸ்க் அணியாதவர்களை மடக்கி அபராதம்

ஊத்தங்கரை, மார்ச் 24: தமிழகத்தில் தற்போது கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என ஊத்தங்கரை பேரூராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது, மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று ஊத்தங்கரை 4 ரோடு ரவுண்டானாவில் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என 20க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து மாஸ்க் அணியாமல் வருபவர்கள் மீது சுகாதார சட்ட விதிகளின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Tags : Uttaranchal ,
× RELATED சிவராத்திரி தரிசன தலங்கள்