×

தேமுதிகவினர் 300 பேர் திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி, மார்ச் 24: கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலில், தேமுதிக கிருஷ்ணகிரி நகர செயலாளர் பரந்தாமன் தலைமையில், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் தமிழ்மணி, நகர மகளிர் அணி செயலாளர் சந்திரா, நகர துணை செயலாளர் சுதாகர், நகர மாணவர் அணி செயலாளர் சையத், மாவட்ட பிரதிநிதி அப்பாஸ், நகர தொண்டர் அணி செயலாளர் சந்தோஷ், நகர மகளிர் அணி செயலாளர்கள் அமுதா, சீதாலட்சுமி, நகர மாணவரணி துணை செயலாளர் கார்த்திக், நகர கேப்டன் மன்ற துணை செயலாளர் மணிகுமார், நகர தொண்டர் அணி துணை செயலாளர் பாலசந்தர், வட்ட செயலாளர்கள் தீபன், பழனி, காளியப்பன், ஷாகீத், செல்வம், சுகுமர், சரவணன், சுரேஷ் உள்ளிட்ட சுமார் 300க்கும் அதிகமானோர் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். திமுக நகர செயலாளர் நவாப் வரவேற்றார். அனைவரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Tags : DMK ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்