×

மன்னார்குடி தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

மன்னார்குடி, மார்ச் 24: மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சவளக்காரன், சிங்கங்குளம் வாக்குச் சாவடி மையங்களில் தமிழக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் பிரசாத் காஸியாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை கண்கானிக்க பொது தேர்தல் பார்வையாளராக சந்திரமோகன் பிரசாத் காஸியாப் என்ற அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவர் மேற்கண்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட சவளக்காரன், சிங்கங்குளம் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் செலவினங்களுக்கான மேற்பார்வையாளர் அருண்குமார் முன்னிலையில் பொது தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் பிரசாத் காஸியாப் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் தடையற்ற மின்வசதி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு என சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமியிடம் கேட்டறிந்தார்.

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, தொடர்பு அலுவலர்கள் கார்த்திகேயன், இன்னாசிராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, வருவாய் ஆய்வாளர் மாதவராஜ், விஏஓ திலகவதி உள்ளிட்ட அரசு அலுவலர் கள் உடனிருந்தனர்.

Tags : Mannargudi Constituency Polling Centers ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு