×

பாபநாசத்தில் துர்க்கை அம்மன் எல்லை வலம் வரும் நிகழ்ச்சி

பாபநாசம், மார்ச் 24: பாபநாசம் வீரமாகாளிம்மன் திருநடன திருவிழாவை முன்னிட்டு 19ம் தேதி விசேஷ ஹோமம், அக்னி எல்லை வலம் வருதல் நடைபெற்றது. 21ம் தேதி ஏராளமான பக்தர்கள் குடமுருட்டி ஆற்றின் கரையிலிருந்து பால் குடம், அலகு காவடி முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து கோயிலை அடைந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதியம் கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. 22ம் தேதி துர்க்கை அம்மன் எல்லை வலம் வருதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Durga Amman ,Papanasam ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...