×

பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு கோழிகள் தீயில் கருகியது வந்தவாசி அருகே

வந்தவாசி, மார்ச் 24: வந்தவாசி அருகே கோழிப்பண்ணைக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்ததால் கோழிகள் கருகி பலியானது.வந்தவாசி அடுத்த தெள்ளாரை சேர்ந்தவர் கருணாகரன்(43). இவரது பாட்டிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் கூனம்பாடி கிராமத்தில் உள்ளது. இதனை கருணாகரன், அவரது தந்தை கன்னியப்பன் ஆகியோர் பராமரித்து வருகின்றனர். நிலத்தில் ேகாழிப்பண்ணை அமைத்துள்ளார். அந்த பண்ணையில் விவசாயத்திற்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை வைத்திருந்தாராம். இரவு நேரத்தில் வீட்டிற்கு வரும் கருணாகரன் நேற்று முன்தினம் காலை மீண்டும் கோழிப்பண்ணைக்கு சென்றார். அப்போது கொட்டகை முழுவதும் தீப்பற்றி எரிந்து விட்டது. கோழிகள் கருகி இறந்து கிடந்தது. கோழிப்பண்ணைக்கு யாரோ மர்ம நபர்கள் திட்டமிட்டு தீ வைத்ததாக கருணாகரன் தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து, கருணாகரின் கோழிப்பண்ணைக்கு தீ வைத்தவர்கள் யார், எதற்காக தீ வைத்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Vandavasi ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு