×

வேதாரண்யம் காவல் நிலையத்தில் அனைத்து மதத்தினருடன் விழிப்புணர்வு கூட்டம்

வேதாரண்யம், மார்ச் 24: வேதாரண்யம் காவல் நிலையத்தில் டிஎஸ்பி மகாதேவன் தலைமையில், வேதாரண்யம் சரகத்திற்கு உட்பட்ட வேட்டைகாரனிருப்பு, தலைஞாயிறு, கடிநெல்வயல், வேதாரண்யம், துளசியாப்பட்டினம், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் ஜமாத் மன்ற தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் (பங்கு தந்தைகள்) மற்றும் அனைத்து மத முக்கிய பிரமுகர்களை அழைத்து மத நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை கண்காணிப்பாளர் அச்சமின்றி அனைவரும் 100 சதவீத வாக்கு அளிக்க வேண்டும், யாரும் பயமில்லாமல் வந்து வாக்களிக்கலாம், ஆங்காங்கே நல்ல பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தங்கள் வாக்குகளை மறக்காமல் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பத்மா, சேகர் உள்பட பல்வேறு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vedaranyam Police Station ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ