×

சீர்காழி தொகுதியில் திமுக, அதிமுக, சுயேட்சை உட்பட 10 பேர் போட்டி

சீர்காழி, மார்ச் 24: சீர்காழி சட்டமன்ற தனித் தொகுதியில் திமுக சார்பில் பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் பாரதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் பொன் பாலு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தர், நாம் தமிழர் கட்சி சார்பில் கவிதா அறிவழகன், மக்கள் நீதி மையம் சார்பில் ராஜகோபால், அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் கம்பன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 21பேர் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு வேட்புமனு பரிசீலனை முடிந்து 11 பேர் வேட்புமனுவை திரும்பப் பெற்றன. தற்போது சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக அதிமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாம் தமிழர் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மையம் அனைத்து மக்கள் கட்சி சுயேட்சைகள் 3 பேர் என 10 பேர் களத்தில் உள்ளனர்.

Tags : DMK ,AIADMK ,Independent ,Sirkazhi ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...