×

குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

குளித்தலை, மார்ச் 24: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தேசிய மங்கலம் அருகே உள்ளது வில்லு காரம் பட்டி இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் கோவில் திருவிழா நாயக்கர்மார்கள் சமூகத்தினர் சார்பில் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மாலை மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சியின் நடைபெற்றது இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இந்நிலையில் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் வில்லு காரம் பட்டியில் நேற்று வாக்கு சேகரிக்க சென்றார் அப்போது நாய்க்கர் மார் சமூகத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பழங்கால இசைக்கருவிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் மாணிக்கம் மாரியம்மன் கோயிலில் சாமி தாிசனம் செய்து விட்டு திருவிழாவிற்கு வந்தவர்களிடம் உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தார் அப்போது எங்கள் வாக்கு உதயசூரியனுக்கு என உறுதியளித்தனர். நிகழ்ச்சியின் போது கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாபதி மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா மாவட்ட பிரதிநிதிகள் மெடிக்கல் மாணிக்கம் ஜபருல்லா வெற்றிவேல் கிளைச் செயலாளர் ஜெயவேல் மற்றும் நிர்வாகிகள் விபி சேகர் வடிவேல் செல்வராஜ் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kulithalai Assembly ,DMK ,Manikkam ,
× RELATED குளித்தலை அருகே வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்