×

திருத்தங்கல் நகரில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர் உறுதி

சிவகாசி, மார்ச் 23: திருத்தங்கல் நகரில் வாறுகால், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் தெரிவித்தார். சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன், திருத்தங்கல் மாரியம்மன் கோவில், ஆலாவூரணி, பசும்பொன்நகர், பனையடிபட்டி போன்ற இடங்களில் நேற்று வீடு வீடாக சென்று மக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திருத்தங்கல் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. நான் எம்ஏல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டால் திருத்தங்கல் நகராட்சி பகுதியில் போர்க்கால அடிப்படையில் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இங்கு குடிநீர் தினமும் வழங்கப்படுவதில்லை. வாறுகால் அகற்றப்படாமல் சுகாதார கேடு நிலவுகிறது. அமைச்சர் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருத்தங்கல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ்நிலையம் செயல்படாமல் உள்ளது. நான் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார். திருத்தங்கல் நகர பொறுப்பாளர் உதயசூரியன், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sivakasi ,Congress ,Tiruthangal ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து