×

திருவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் தப்பியோடிய டிரைவருக்கு வலை

திருவில்லிபுத்தூர், மார்ச் 23: திருவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான 515 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் அருகே இந்திராநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணன்கோயிலில் இருந்து திருவில்லிபுத்தூர் நோக்கி சரக்கு வேன் வந்தது. போலீசாரை கண்டதும் வேனை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். மெக்கானிக் உதவியுடன் போலீசார் வேனை ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தனர். வேனிலுள்ள 10 சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது 515 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 15 ஆயிரமாகும். குட்கா மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், வேனை ஓட்டி வந்தவர் தேனியை சேர்ந்த பவுல்ராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...