×

சிவகாசி நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது அதிமுக வேட்பாளர் லட்சுமிகணேசன் பேச்சு

சிவகாசி, மார்ச் 23: சிவகாசி நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது என, அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் தெரிவித்தார்.  சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன், நேற்று பெண் தொழிலதிபர்கள், சாதனை பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அய்யன் குரூப்ஸ் பவானி கிரகதுரை, மீரா வைரபிரகாசம், ஸ்டாண்டர்டு குரூப் பீனாராஜ், திலகவதி ரவீந்திரன், சுந்தரவேல் குரூப்ஸ் ஆஷா அசோக், காளீஸ்வரி குரூப் நிறைமதி, இன்டஸ்ட்ரியல் குரூப் மகாலட்சுமி, உலக கின்னஸ் சாதனையாளர் யோகா மாஸ்டர் ஞானவேணி, சங்கரேஸ்வரி பிராசஸ், சிவகாசி வர்த்தக சங்கம்  உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.  தொடர்ந்து சிவகாசி நகர் பகுதியில் காமராஜர் சிலை, அய்யப்பன் காலனி உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர் லட்சுமி கணேசன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சிவகாசி நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், கர்ப்பிணிகள்  நீண்ட தூரம் அலைய கூடாது என்பதற்காக மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது’’ என்றார். பிரசாரத்தில் நகர செயலாளர்கள் அசன் பதுரூதீன், பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், பலராம், வழக்கறிஞர் பலராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : AIADMK ,Lakshmiganesan ,Sivakasi ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...