×

திருவில்லிபுத்தூர் தொகுதி காங். வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 23: மம்சாபுரம் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக திமுக கூட்டணியின் திருவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு ஆதரவாக பிரசாரம் நடைபெற்றது. முன்னதாக, மம்சாபுரம் பேரூராட்சி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. மம்சாபுரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் சூரியநாராயண் முன்னிலை வகித்தார். இதனைத்தொடர்ந்து வேட்பாளர் மாதவராவுக்கு கைச் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரசாரம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags : Srivilliputhur Block Cong ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...