×

முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் காங். வேட்பாளர் மாங்குடி வாக்குறுதி

காரைக்குடி, மார்ச் 23:  காரைக்குடி அருகே சாக்கோட்டையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் சின்னத்துரை தலைமை வகித்தார். காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, வாக்காளர்களிடம் பேசுகையில், ‘‘மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். தொகுதியில் மக்களின் பிரச்னைகள் குறித்து மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு அதனை நிறைவேற்றுவேன். மக்கள் தேவைகளை பூர்த்தி செய்து முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். விவசாய பகுதியாக திகழும் இப்பகுதிகளில் விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து செயல்படுவேன். தொகுதியின் வளர்ச்சியில் முழுகவனம் செலுத்தப்படும். கொரோனா தொற்றால் நாம் பல இழப்புகளை சந்தித்துள்ளோம். வருமானம், வேலை, மன நிம்மதி, உடல், மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் மக்களின் குறைகளை நிறைவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே நல்ல ஆட்சியை தர முடியும் என்றார். இதில் திமுக பேரூர் செயலாளர் பக்ருதீன் அலிபாய், சட்டபாதுகாப்பு குழு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் சொக்கலிங்கம், சுப்பிரமணியன், மதிமுக பசும்பொன் மனோகரன், காங்கிரஸ் நகர தலைவர் கண்ணன், வட்டார செயலாளர்கள் செல்வம், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mangudi ,
× RELATED மணல் ஏற்றி வந்தவர் கைது