×

பரமக்குடி தொகுதியில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

பரமக்குடி, மார்ச் 23:  பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, நேற்று தொகுதியில் போட்டியிடும்   இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.  அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 7 பேர் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகளாக 8  பேர் என மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலமாக சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முருகேசனுக்கு உதயசூரியன், அதிமுக சதன் பிரபாகருக்கு  இரட்டை இலை, தேமுதிக வேட்பாளர் செல்விக்கு முரசு, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கருப்பு ராஜாவுக்கு மின்கல விளக்கு, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சசிகலாவிற்கு கரும்பு விவசாயி, மை இந்தியா பார்ட்டி கட்சியின் வேட்பாளர் பார்த்த சாரதிக்கு கண்காணிப்பு கேமரா சின்னங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பரமக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி தங்கவேலு தெரிவித்துள்ளார்.

Tags : Paramakudi ,
× RELATED பரமக்குடி அருகே மர்ம கும்பல்...