×

தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

தொண்டி, மார்ச் 23:  திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொண்டியில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துணை ஆட்சியர் அர்ச்சனா, உதவி இயக்குநர் விசாலி ஆகியோர் தலைமையிலும், வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா ஆகியோர் முன்னிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர்கள் அமுதன், புல்லாணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ், நம்பு ராஜேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் முடிவில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Election Awareness Rally ,
× RELATED செங்கல்பட்டில் தேர்தல் விழிப்புணர்வு...