×

சேந்தமங்கலம் அருகே விதிமீறிய டாஸ்மாக் பாருக்கு சீல் மது விற்றவர் கைது

சேந்தமங்கலம், மார்ச் 23: சேந்தமங்கலம் அருகே, விதிமுறை மீறி காலையில் இயங்கிய டாஸ்மாக் பாரில் அதிரடி சோதனை நடத்திய மதுவிலக்கு இன்ஸ்பெக்டர், விற்பனையாளரை கைது செய்து, பாருக்கு சீல் வைத்தார்.
சேந்தமங்கலம் அடுத்துள்ள காளப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உள்ள பாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும், மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி சக்தி கணேசனுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா, சேந்தமங்கலம் எஸ்ஐ சந்திரன் ஆகியோர் தலைமையில், நேற்று காலை அப்பகுதிக்கு சென்று மதுக்கடை பாரில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது பாரில் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து மது விற்பனை செய்த முருகேசன் (65) என்பவரை கைது செய்த போலீசார், டாஸ்மாக் பாரை பூட்டி சீல் வைத்தனர்.



Tags : Tasmac ,Chennamangalam ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை