×

தாராபுரம் திமுக வேட்பாளருக்காக மூலனூரில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு

தாராபுரம்.மார்ச்23: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூரில் திமுக சார்பிலான தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இல.பத்பநாபன் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். உடன் தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் பரணிமணி  மூலனூர் ஒன்றிய கழக செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பணிமனை திறப்பு விழா கூட்டத்தில் திமுக வேட்பாளர் கயல்விழி பேசியதாவது: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜனதாவுடன் நேரடியாக மோதுகிறோம். கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் விழிப்புணர்வுடனும் செயல்பட்டு பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாணவர்கள், விவசாயிகள், பெண்களின் நலன் காக்கப்பட வேண்டும்.இதற்காகத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த தர்ம யுத்தம் நடக்கிறது என்றார். தொடர்ந்து மூலனூர் அண்ணா நகர் கடைவீதி பகுதிகளில் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.நிகழ்ச்சியில் மூலனூர் பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி,கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ், தாராபுரம் ஒன்றியக் கழகச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Mulanur ,Tarapuram ,
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை