×

பெருந்துறை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமார் 45 ஊர்களில் தீவிர பிரசாரம்

சென்னிமலை, மார்ச் 23: பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக ஜே.கே என்ற எஸ்.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவர் பெருந்துறை தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று இவர் பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பனியம்பள்ளி மற்றும் ஈங்கூர் ஊராட்சி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். காலை 7 மணிக்கு ஈங்கூர் சரவம்பதியில் தனது பிரசாரத்தை தொடங்கி நல்லமுத்தாம்பாளையம், எல்லைமேடு, கவுண்டனூர், ஈங்கூர், பனியம்பள்ளி, கவுண்டம்பாளையம், தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுப்புதூர், தோப்புப்பாளையம் உள்ளிட்ட 45 சிற்றூர்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில்,`உங்கள் ஊர் அருகில் உள்ள வாய்ப்பாடி பகுதியில்தான் நான் பிறந்து வளர்ந்தேன் என்பதால் இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் எனக்கு நன்கு தெரியும். அதேபோல், இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளும் தெரியும். உங்கள் குறைகளை முழுமையாக நிறைவேற்றவும், தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை கொண்டு வரவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார்.வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.அவருடன் சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.ஏ.கருப்புசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் நடராஜமூர்த்தி, பாலசுப்பிரமணியம், வாய்ப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டி.டி.ஜெகதீஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : Perundurai ,AIADMK ,Jayakumar ,
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...