×

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன் முறப்பநாடு பகுதியில் பிரசாரம்

ஓட்டப்பிடாரம், மார்ச் 23: ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன், முறப்பநாடு சுற்றுப்பகுதி கிராமங்களில் வாக்குசேகரித்தார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகன் நேற்று மாலை முறப்பநாடு, சென்னல்பட்டி, கீழபுத்தனேரி, புதுக்கிராமம் என்ற பக்கபட்டி, நாணல்காடு, அகரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி பிரமுகர்களுடன்  மக்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1500 கொடுப்பதாக நம்முடைய முதல்வர் அறிவித்திருக்கிறார்.  வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அவர்களுக்கு உழவு மானியம் ஆண்டிற்கு ரூ.7500 வழங்கப்படும். வீடு இல்லாதவர்க்கு  வீடு கட்டித் தரப்படும். ஓட்டப்பிடாரம் தொகுதியை வளர்ச்சி நிறைந்த தொகுதியாக மாற்றுவேன்’ என்றார்.

 வேட்பாளருடன் தூத்துக்குடி மத்திய செயலாளர் லட்சுமண பெருமாள் கருங்குளம் யூனியன் சேர்மன் ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் தளபதி சண்முகம், மாவட்ட கவுன்சிலர்கள் கோமதி, பாலசரஸ்வதி, தெற்கு ஒன்றிய செயலாளர் செங்கான், ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி கோபி உள்ளிட்ட அப்பகுதியைச்சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : AIADMK ,Mohan Murappanadu ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...