×

திமுக வேட்பாளர் நீலமேகம் வாக்கு சேகரிப்பு தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை, மார்ச் 23: தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள், பொது இடங்களில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் மாவட்டத்தில் 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மொத்தம் 504பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மட்டும் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்றறு வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Tags : Thimu ,Tanjai ,
× RELATED திண்டுக்கல் அருகே 300 ஆண்டு பழமையான மர...