×

படகில் அடிபட்டு இறந்த ஆமை வேளாங்கண்ணி லாட்ஜில் தங்கிய முதியவர் மர்மசாவு

நாகை, மார்ச் 23: பட்டுக்கோட்டையை சேர்ந்த முதியவர் வேளாங்கண்ணி லாட்ஜில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (65). இவர் கடந்த 19ம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில் 20ம் தேதி இரவு அறையை காலி செய்ய பணியாளர்கள் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. அதனையடுத்து பணியாளர்கள், இளங்கோவன் தூங்குகிறார் என நினைத்து சென்றுவிட்டனர்.
பின்னர் 21ம் தேதி பணியாளர்கள் மீண்டும் அறையின் கதவை தட்டும்போதும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து வேளாங்கண்ணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் லாட்ஜுக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளங்கோவன் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marmasavu ,Velankanni Lodge ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் உதவி...