×

கடையநல்லூர் தொகுதியில் விளையாட்டு துறை சார்பில் வேலைவாய்ப்பு அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் உறுதி

தென்காசி, மார்ச்.22 கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அய்யாதுரைபாண்டியன்  முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அமமுகவில் இணைத்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் பெருமையாபாண்டியன், நகர செயலாளர் கமாலுதீன்,ஜெ பேரவை மைதீன். சிறுபான்மை பிரிவு செயலாளர் கோதர்ஷா, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர்  சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தனக்கு ஆதரவு தெரிவித்த இளைஞர்களிடம் அய்யாத்துரை பாண்டியன் பேசுகையில், கடையநல்லூர் தொகுதியில் விளையாட்டு துறையை மேம்படுத்தவும் இளைஞர்களுக்கு விளையாட்டு துறை மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதற்கும் பாடுபடுவேன்.  ஏற்கனவே கடந்த ஓராண்டாக ஏராளமான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தேன். திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு  முறையான பயிற்சி வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பேன். கடையநல்லூர் தொகுதியிலிருந்து வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கும் பொதுமக்களின் குறைகள் அனைத்தையும் கண்டறிந்து நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.

முன்னதாக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் அகரகட்டு அந்தோணியார் ஆலயத்தில் பங்குதந்தையிடம் ஆசி பெற்றார். அப்பகுதி ஆலயத்துக்கு வந்த கிறிஸ்தவர்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்து சமுதாய நாட்டாமைகள் ஆகியோரை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

Tags : Kadayanallur ,Ayyathurai Pandian ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது