×

முக்கூடல் அருகே ஆற்றில் மூழ்கி அரசு ஊழியர் சாவு

பாப்பாக்குடி. மார்ச் 22: முக்கூடல் அருகேயுள்ள அணைந்தநாடார்பட்டியைச் சேர்ந்த தளவாய் மகன் ஆறுமுகவேல் (28). மாற்றுத்திறனாளியான இவர் வணிகவரித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், தர்ஷித் என்ற மகனும், ஜன்சனா, சாத்விகா என்ற மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் அசைவ உணவு பொருட்கள் வாங்கி கொடுத்துவிட்டு சமைத்து வைக்குமாறு மனைவியிடம் கூறிவிட்டு முக்கூடலில் தாமிரபரணி ஆற்றில் குளித்து வருவதாக கூறிச்சென்றார்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஆறுமுகவேல் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் சிறிது நேரம் தேடி அவரை மீட்டனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த பாப்பக்குடி போலீஸ் எஸ்ஐ சிவதாணு, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறுமுகவேலின் தந்தை கடந்த 40 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்தார்.

Tags : Trincomalee ,
× RELATED நேற்றும் திருச்செந்தூரில் 23செ.மீ, காயல்பட்டினத்தில் 21செ.மீ. கனமழை பதிவு..!!